உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

செம்மேடு கிராமத்தில் 28ம் தேதி மனு நீதி நாள்

கடலூர் :

                 செம்மேடு கிராமத்தில் வரும் 28ம் தேதி மனு நீதி நாள் முகாம் நடக்கிறது.

                    பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமத்தில் வரும் 28ம் தேதி  கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. அதனையொட்டி பொதுமக்கள் மனுக்கள் கொடுக்க வசதியாக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மனு கொடுக்க விரும்புவோர் இந்த பெட்டியில் போடலாம்.

                மேலும், இன்று (7ம் தேதி) வருவாய் மற்றும் பிற துறை அலுவலர்கள் செம்மேடு கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகின்றனர். இவ்வாறு பெறப்படும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை விபரம் மனுநீதி நாளன்று தெரிவிக்கப்படும். மேலும் மனுநீதி நாளன்று கிராமத்தில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், விவசாய திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச்சத்து மற்றும் சிறுசேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சிகள் நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior