உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

பொங்கல் பண்டிகைக்காக கரும்பு வெட்டும் பணி துவக்கம்

சிதம்பரம் :

          சிதம்பரம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விற்பனைக் காக கரும்பு வெட்டும் பணி துவங்கியது.

             சிதம்பரம் அருகே வேளக்குடி, கடவாச்சேரி, பழையநல்லூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில்  அப்பகுதி விவசாயிகள் பொங் கல் பண்டிகைக்காக கரும்பு பயிரிட்டிருந்தனர். தற்போது பொங்கலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் நேற்று கரும்பு வெட்டும் பணி துவங்கியுள்ளது.

              இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பொங்கலை நம்பி தான் இப்பகுதியில் கரும்பு பயிரிட்டோம். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. எஞ்சிய கரும்புகளை வியாபாரிகளிடம் மொத்தமாக விற் பனை செய்து விடுகின்றோம். தற்போது 20 கரும்பு கொண்ட கட்டு 100 முதல் 125 ரூபாய் வரை வயலிலேயே விலை பேசி விற்பனை செய்கின்றோம். இப்பகுதியில் வெட்டப்படும் கரும் புகள்  கடலூர், புதுச்சேரி, செஞ்சி, விழுப்புரம், திண்டிவனம், சென்னை மற்றும் சிதம்பரம் பகுதிகளுக்கு கொண்டு செல்லப் படுகிறது என்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior