உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : சி.ஐ.டி.யூ., மாநில மாநாட்டில் வலியுறுத்தல்

கடலூர் :

            அனைத்து வகை  தொழிலாளர்களையும், நலவாரிய உறுப்பினர்களாக அனுமதிக்க புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும் என தமிழ் மாநில சி.ஐ.டி.யூ., வலியுறுத்தியுள்ளது.

                கடலூரில் கடந்த 4ம் தேதி முதல் நடந்து வரும் சி.ஐ.டி.யூ., தமிழ் மாநில 11வது மாநாட்டின் இறுதி நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

               கடந்த 2003ல் பா.ஜ., அரசு புதிய பென்ஷன் மசோதாவை தாக்கல் செய்து 2004ல் அமல்படுத்தியது. பின் வந்த காங்., அரசு புதிய பென்ஷன் மசோதாவை சட்டமாக்க முயன்றபோது, ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த கம்யூ., கட்சிகளின் எதிர்ப் பால் நிறுத்தி வைத்தது. இருப்பினும் நிர்வாக உத்தரவுகள் மூலம் மத்திய அரசு அதைதொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.

                            பென்ஷனை தனியார் மயமாக்கி ஓய்வு பெறுப வர்களின் எதிர்காலத்தை உத்தரவாதமற்ற நிலைக்கு தள்ளும் இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இதற்காக நாடு தழுவிய போராட்டத்திற்கு ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை மற்றும் அனைத்து அரசு ஊழியர்களும்  தயாராகும்படி இம் மாநாடு அழைக்கிறது.

                   கடந்த 83ம் ஆண்டிற்கு பிறகு கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 350 பேர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட் டுள்ளனர். 800க்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப் புள்ள மீனவர்களின் படகுகள், வலைகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
 
             பாரம்பரியமாக கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களின் நிலை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதலை தடுத்து மத்திய அரசு, இலங்கை அரசை நிர்ப்பந் திக்க வேண்டும்.

               புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் முறைசாரா தொழிலாளர் நலச்சங் கத்தில், தமிழக அரசு அனுமதித்தது போன்ற அனைத்து வகைப்படுத்தப்பட்ட முறை சாரா தொழிலாளர்களையும், உறுப்பினர்களாக அனுமதிக்க அம்மாநில அரசு உத்தரவிட வேண்டும்.

                    கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட, தொழிலாளர்கள் நலனுக்காக ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தொழிலாளர் நலப்பயன்கள் தேக்கமடையாமல் இருக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior