உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

சிதம்பரம் :

                சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலை ப்பள்ளியில் 6ம்வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி துவக்க விழா நடந்தது.

                   சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் 6 ம்வகுப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சியளிக்கும் வகையில், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளரும் பள்ளியின் செயலருமான டாக்டர் ரத்தினசபாபதி 10 கம்யூட்டர்களை வழங்கினார். இதற்கான துவக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர்  தர்பாரண்யன்  பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். கம்யூட்டர் ஆசிரியர்கள் பாலசுப்ரமணியன், சரவணன் ஆகியோர் பயிற்சியளித்தனர். மேலும் 6ம்வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ் மற்றும் ஆங்கில கையெழுத்துப் பயிற்சி, ஆங்கில இலக்கண வகுப்பு, ஆங்கில ஸ்போக்கன் வகுப்பு, ஓவியப் பயிற்சி, யோகா வகுப்பு தொடந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior