உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

சாலை பாதுகாப்பு வார விழா

நெய்வேலி: 
                   
               நெய்வேலியில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வுக் கூட்டம் வேலுடையான்பட்டு சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நெய்வேலி நகரம், வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, ஊத்தங்கால் பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வாடகை வேன் ஓட்டுநர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பேசிய நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சேகர், போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்கள் ஓட்டும்போது விபத்து தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்கவேண்டும் என்றார்.

              நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ரேவதி உள்ளிட்டோர் சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினர். இதையடுத்து விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior