உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

ஆதரவற்ற மூன்று சிறுவர்கள் அரசு காப்பகத்தில் சேர்ப்பு

கடலூர் :

            ஆதரவற்ற மூன்று சிறுவர்கள் அமைச்சரின் உத்தரவால் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

              கடலூர் அடுத்த கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மாரிமுத்து (35). இவரது மனைவி அனுசுயா (30). இவர்களுக்கு மணிமேகலை (12) என்ற மகளும், ஸ்டாலின் (9), கனி அமுதன் (6) என்ற 2 மகன்களும் உள்ளனர். மூவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 8, 4 மற்றும் 2ம் வகுப்பு படித்து வருகின்றனர். 

                  குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாரிமுத்து உடல் நலம் பாதிக்கப் பட்டு கடந்த 2008ம் ஆண்டு இறந்தார். இவர் இறந்த துக்கம் தாங்காமல் அவரது மனைவி அனுசுயா  2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.  பெற்றோர் இறந்ததால் மூன்று குழந்தைகளும் நிர்கதியாக நின்றனர். ஆதரவற்ற நிலையில் இருந்த சிறுவர்கள் மாரிமுத்து தாய் சின்னலட்சுமி (75) ஆதரவில் இருந்தனர். இந்நிலையில் அமைச் சர் பன்னீர்செல்வம் கோதண்டராமபுரத் திற்கு சென்ற போது சின்னலட்சுமி 3 குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை. படிக்க வைக்க முடியவில்லை என கூறி அழுதார்.  உடன் அமைச்சர் பன்னீர்செல்வம் மூவரையும் அரசு காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.

                அதன்பேரில் நேற்று மூன்று சிறுவர்களும் அமைச்சர் பன்னீர்செல் வம், கலெக்டர் சீத்தாராமன் முன்னிலையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரியிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து கலெக் டர் உத்தரவின் பேரில் மணிமேகலை வேணுகோபாலபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், ஸ்டாலின், கனி அமுதன் ஆகியோர் அரசு காப்பகத்தில் உள்ள பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior