உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

இலவச கால்நடை மருத்துவ முகாம்

விருத்தாசலம்: 
 
          விருத்தாசலம் அருகில் உள்ள க.இளமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பசுமாடுகளுக்கு குடற்புழு நீக்கம், மலட்டுத்தன்மை நீக்கம், செயற்கை கருவூட்டல், சினை ஆய்வு ஆகியன செய்யப்பட்டன. மேலும் மாடுகளுக்கு சப்பை நோய் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை ஆய்வாளர்கள் வீரப்பன், பொன்வேலன், திலிபன், மருத்துவர் சரவணன், பராமரிப்பு உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிததனர். ஊராட்சித் தலைவர் பழனியம்மாள் முகாமை தொடங்கி வைத்தார். சுப்ரீம் அரிமா சங்க தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior