உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு வாந்தி

புவனகிரி :

                    பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 40 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

                   கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம்  மாணவர்களுக்கு முட்டையுடன் உணவு வழங்கப்பட்டது. சாப்பிட்ட மாணவர்கள் செந்தமிழ்ச்செல்வன், பாலாஜி, புவேனந்திரன், இளையராஜா உட்பட 40 மாணவர்கள் சில நிமிடங்களில் வாந்தி எடுத்து மயங்கினர்.

                அவர்களை உதவி தலைமையாசிரியர் நடராஜன், சத்துணவு பொறுப் பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள்  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 10ம் வகுப்பு மாணவர் ராஜமனோகரன், பிளஸ் 1 மாணவர் நிஷாந்தன் ஆகியோருக்கு குளுகோஸ் ஏற்றப் பட்டது. மற்ற மாணவர்கள் சிகிச்சை பெற்று மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.  சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior