உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

வெள்ள பாதிப்பிற்கு தீர்வு காண திட்டம் தேவை! விவசாய சங்கம் புதிய யோசனை

காட்டுமன்னார்கோவில் :

                              காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான கடலூர் மாவட் டத்தில் சிதம்பரம், காட்டுமன் னார்கோவில் பகுதிகள் ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிப்பதற்கு நிரந்தர தீர்வு காண தொழில் நுட்ப நிபுணர்களை கொண்டு திட்டம் தயாரிக்க வேண்டும்.

                            கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி காவிரி டெல்டா கடை மடை பகுதியாகும். கடலூர் மாவட்டத்தையும், நாகை மாவட்டத்தையும் தமிழகத்தின் மிகப்பெரிய வடிகாலான கொள்ளிடம் ஆறு பிரிக்கிறது. இதன் குறுக்கே 1836ம் ஆண்டு ஆர்தர்காட்டன் கட்டிய கீழணை  என்ற ஒரே ஒரு நீர்தேக்கம் மட்டுமே உள்ளது.

                          இந்த நீர் தேக்கத்தின் மூலமாக வடவாறு, வடவாறு வழியாக வீராணம், வடக்கு ராஜன் வாய்க்கால், கஞ்சங்கொல்லை வாய்க்கால் மூலம் ஒரு லட்சத்து 12892 ஏக்கர், வெள்ளாறு, ராஜன் வாய்க் கால், பெருமாள் ஏரி பாசனம் மூலம் 40,207 ஏக்கர் என மொத்தம் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 99 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. இத்துடன் நாகை மாவட்டத்தில் தெற்கு ராஜன், குமுக்கி மண்ணியாறு, மேலராமன், கீழ்ராமன் வாய்க் கால் மூலம் 25,000 ஏக்கர் பாசனம் பெறுகிறது.

                               மேட்டூர் அணை நிரம்பி வழியும் போதெல்லாம் உபரி நீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்தில் 2 லட்சம் கன அடிக்குமேல் தண்ணீர் வரும் போது கொள்ளிடத்தின் வட கரையான கடலூர் மாவட்டத்திலும், தென் கரையான நாகை மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. எனவே வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காணவும், வீணாக கடலில் கலக்கும் மழை நீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்துவதும் அவசியமாகிறது. தண்ணீர் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாக்கப்படும்.

              காவிரியின் குறுக்கே 7.5 மீட்டர் உயரமும், 5 கிலோ மீட்டர் நீளத் திற்கும் கட்டப்பட்டுள்ள தடுப் பணை, ஷட்டர்கள் மேலும் கட்டப்படுவதுடன் அதே போன்று கொள்ளிடத்திலும் 7 தடுப்பணைகள் கட்ட வேண்டும். இவ்வாறு கட்டப்படும் தடுப்பணைகள் மூலம் கொள்ளிடம் ஒரு முறை நிரம்பினால் 14 டி.எம்.சி தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் என்கின்றனர் விவரமறிந்த விவசாய சங்க பிரமுகர்கள். இதே முறையில் கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம், வெள்ளாற்றிலும் தடுப்பணை மற்றும் ஷட்டர் அமைக்கலாம்.

                     மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியும், சென்னைக்கு குடி நீர் வழங்கும் ஆதாரமாக இருப்பது வீராணம் ஆகும். இதன் ஆரம்ப கால கொள்ளளவு 1.44 டி.எம்.சி யாக இருந்தது. தற்போது ஏரி தூர்ந்துபோய், ஆக்கிரமிக்கப்பட்டும் அதன் கொள்ளளவு  0.96 டி.எம்.சியாக குறைந்துவிட்டது. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று ஏரியை தூர் வாரி ஆழப்படுத்தினால் ஏரியின் கொள்ளளவு 2 டி.எம்.சி யாக உயர்த்த முடியும். வீராணம் ஏரியின் வடிகாலான வெள்ளியங்கால் ஓடை மூலம் வெளியேற்றப்படும் தண்ணீரால் ஏற்படும் பாதிப்பை தடுக்க வெள்ளியங்காலில் குமராட்சி அருகே "ரெகுலேட்டர்' அமைத்து கால்வாய் வெட்டி கீழ்பருத்திக்குடியில் கொள்ளிடத்தில் வடித்து விடலாம். இதன் மூலம் சிதம்பரம் பகுதியில் வெள்ளம் சூழ்வதை தடுக்க முடியும்.

                           அதே போன்று வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில்  427.35 சதுர கிலோ மீட்டர் உள்ளது. இதில் செங்கால் ஓடை வழியாக வரும் நீர் நேரடியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. தவிர கெங்கைகொண் டசோழபுரம் அருகில் உள்ள பொன்னேரி தூர்ந்துள்ளதால் இரண்டு நாள் மழை பெய்தாலே ஏரி நிரம்பி உபரி நீர் கருவாட்டு ஓடை, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. இந்த கருவாட்டு ஓடை வடிகாலை நேரடியாக கொள்ளிடத்தில் இணைக்க போடப்பட்ட திட்டம் இதுவரை செயல்படுத்தவில்லை.

                         இந்த திட்டங்களை தொழில் நுட்ப நிபுணர்களையும், பொதுப் பணித் துறை அதிகாரிகளையும் அரசு  கலந்தாலோசித்து தயாரித்து செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாய சங்க பிரமுகர்களின் கோரிக்கை. இப்படி செய்தால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாவிலுள்ள பல கிராமங்களை வெள்ள அபாயத்தில் இருந்து நிரந்தரமாக காப்பாற்ற முடியும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior