உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

சிதம்பரம் : 

                அண்ணாமலை பல்கலைக்கழத்தில் தாழ்த்தப் பட்ட பெண்களுக்கு உணவு பதப்படுத்துதல் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நடந்தது.

               அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறை, புது டில்லி மத்திய உயிர் தொழில் நுட்பத் துறை நிதி உதவியுடன் தாழ்த் தப்பட்ட பெண்களுக் கான உணவு பதப்படுத் தும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியை பல்கலைக்கழக வேளாண்புல அரங் கில் நடத்தியது.

                    வேளாண் பொருளாதாரத்துறை பேராசிரியர் சுந்தரவரதராஜன் வரவேற்றார். முகாமை வேளாண் புல முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். ஐந்து நாள் நடைபெறும் பயிற்சியில் 75 பெண்கள் பங்கேற்றனர். பயிற்சியின் துவக்க விழாவில் சென்னை ரெப்கோ வங்கியின் திட்ட இயக்குனர் மாணிக்கசுந்தரம் தலைமை தாங்கி பேசுகையில், இந்த பயிற்சியை முடிக்கும் பெண்களுக்கு கடன் வழங்க வங்கிகள் தயாராக உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிராமப்புற பெண்கள் சாதனை படைக்க வேண் டும் என்றார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், வங்கி அதிகாரிகள், சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior