உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 07, 2010

குண்டும், குழியுமானது நடுவீரப்பட்டு சாலை

நடுவீரப்பட்டு :

          நடுவீரப்பட்டு-பாலூர் கெடிலம் ஆறு வரை உள்ள  தார்சாலை கடந்த 15 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளதால் கிராம மக்கள் தினம், தினம் அவதிப்பட்டு வரகின்றர்.

             நடுவீரப்பட்டு - பாலூர் கெடிலம் ஆறு வரை உள்ள  தார்சாலை குண்டும், குழியுமாகி உள்ளதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த சாலை வழியாக இப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் நிலங் களில் பயிரிடப்படும் கரும்புகளை நெல்லிக் குப் பம் கரும்பு ஆலைக்கு எடுத்து செல்கின்றனர்.

                 குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள இந்த சாலையை 23 கி.மீ., தூரத்திற்கு அகலப் படுத்தி புதிய தார் சாலை போடும் பணி மூன்றாண் டுகளுக்கு முன் துவங்கியது. பத்திரக்கோட்டை வரை உள்ள 15 கி.மீ., தூரத்திற்கு புதிய தார் சாலை போடப்பட்டது. மீதி உள்ள 8 கி.மீ., தூரம் பணி செய்யாமல் கிடப் பில் உள்ளது. பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து 10 மாதங்களுக்கு முன் பத்திரக் கோட் டையிலிருந்து நடுவீரப்பட்டு நைனார்பேட்டை வரை உள்ள 2.80 கி.மீ., தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தாமல் கடமைக்கு அப்பளம் கணத் தில் போடப்பட்ட தார் சாலை சில மாதங்களில் கந்தல் சாலையாக மாறியது.

                    இந்த 23 கி.மீ., தூர சாலை பண்ருட்டி, கடலூர், அண்ணாகிராமம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் உள்ளது. கெடிலம் பாலத்திலிருந்து பாலூர் வரை அண்ணாகிராம ஒன்றியத்தில் உள்ளதால் அவர்கள் அந்த ஏரியாவை மட்டும் அகலப்படுத்தாமல் ரோடு போட்டனர். இதனால் ரோட்டின் இருபுறமும் பள்ளங்கள் உள்ளதால் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் பஸ் டிரைவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அவதிப்படுகின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் இப்பகுதி மக்களின் 15 ஆண்டு கால கனவான ஆக்கிரமிப்புகள் அகற்றி  தரமான அகலப்படுத்தப்பட்ட தார்சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior