உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

தொழிற் பயிற்சி முடித்த 15 பேருக்கு சான்றிதழ்

நெய்வேலி  : 

                    என்.எல்.சி., க்கு நிலம் மற்றும் வீடுகள் கொடுத்தவர்களுக்கு நிறுவனம் வழங்கி வரும் தொழிற்பயிற்சியை நிறைவு செய்த 15 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
 
                 என்.எல்.சி.,யின் சுரங்கப்பணிகளுக்காக தங்கள் வீடு மற்றும் நிலங்களை கொடுத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் செய்து பணம் சம்பாதித்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ள நிறுவனம் பல்வேறு தொழில் பயிற்சிகளை என்.எல்.சி., பயிற்சி வளாகத்தில் வழங்கி வருகிறது. 26வது குழுவிற்கு கனரக வாகனங்களை இயக் குதல், பராமரித்தல் மற்றும் பழுது நீக்குதல் போன்ற 15 நாள் பயிற்சியினை நிலம் மற்றும் வீடுகளை கொடுத்த 15 பேருக்கு அளிக்கப்பட் டது. இந்த பயிற்சியின் நிறைவு நாளில் என். எல்.சி., திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் கந்தசாமி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நில எடுப்புத்துறை பொது மேலாளர் ராமலிங்கம், தலைமை மேலாளர்கள் ஸ்ரீதர், ஆனந்தன் மற்றும் வீரசிகாமணி, ஜோதி முகமது கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior