உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றி

கடலூர் : 

             பண்ருட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கவேண்டும் என்கிற  கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள முதல்வருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
 
இது குறித்து ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கை: 

                  பண்ருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்கவேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசுக்கும் கல்வித்துறைக்கும் கோரிக்கை விடுத்திருந்தது. மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்வர் கருணாநிதி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார். தேவையின் அடிப்படையில் இக்கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior