உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

பெண் எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

கடலூர் : 

                       சரியாக விசாரிக்காமல் பெண்களை தாக்கிய, சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்டவர்கள் எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
 
                        கடலூர் 6வது வார்டு மஞ்சக்குப்பம் வில்வநகரில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் இருந்து கழிவு நீர் கால்வாயை அருகில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கும் பணியை மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர்கள்  ஈடுபட்டனர். இந்நிலையில் கழிவு நீர் மூலம் துர்நாற்றம் வீசுவதால் திரவுபதி அம்மன் கோவில் தெருவினர் கால்வாய் அமைக்கும் பணியை தடுத்தனர். இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் துர்கா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சப் இன்ஸ்பெக்டர் துர்காவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் சரியாக விசாரிக்காமல் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior