உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் வீடுகள் தேர்வு பட்டியலை கலெக்டர் ஆய்வு


பண்ருட்டி : 

             பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தில் தேர்வு செய்த பயனாளிகள் குறித்து கலெக்டர் சீத்தாராமன்  நேரில் ஆய்வு செய்தார்.
 
                    கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில்  ஒரு கிராமம் தேர்வு செய்து கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கூரைவீடுகள் கணக் கெடுப்பு பணி நடந்து வருகிறது.   பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில்  மணப்பாக்கம் ஊராட்சி  தேர்வு செய்யப் பட்டு   கூரைவீடுகள் பட்டியல் மக்கள் நலப்பணியாளர் கள், வி.ஏ.ஓ., ஊராட்சி உதவியாளர்கள் குழுவினரால் தயார் செய்யப் பட்டது. இந்த பயனாளிகள் பட்டியலை கலெக்டர் சீத் தாராமன் ஆய்வு செய்தார். இதில் பண்ருட்டி தாசில் தார் பாபு, பி.டி.ஓ.,க்கள் கல்யாண்குமார், ரீட்டா,  ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி,  துணைத் தலைவர் ராகவன் பங்கேற்றனர்.
 
பின்னர் கலெக்டர் சீத் தாராமன் கூறியதாவது: 

                        கலைஞர் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 13 ஊராட்சிகள் தேர்வு செய்து கூரைவீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி முதற்கட்டமாக மக்கள் நலப்பணியாளர், வி.ஏ.ஓ.,உதவியாளர் அடங்கிய குழுவினர் தயார் செய்தனர். இதனை ஆய்வு செய்துள்ளோம். இங்கு  கூரை வீடுகள் அரசு விதிமுறைப்படி தயார் செய்துள்ளனர்.  மாவட்டம் முழுவதும் 13 ஊராட்சியில் கூரைவீடுகள் பட்டியல் பணி முடிந்தது. பண்ருட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உருவாக்குவது குறித்து துணை முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு பிறகு நேரில் வந்து  முடிவு செய்வோம் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior