உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

குளத்தில் கழிவு நீர் தேக்கம்: கொசு தொல்லையால் அவதி

நெல்லிக்குப்பம் : 

             நெல்லிக்குப்பம் அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் உள்ள குளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
 
                  நெல்லிக்குப்பம் நகராட்சி அண்ணா நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குளம் உள்ளது. இந்த குளத்தில் சுற்ற வட்டாரத்தில் இருந்த வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குளம் முழுவதும் ஆகாயத்தாமரை வளர்ந்து குளத்தை மூடியுள்ளது. குளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதி மக்கள் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொசு உற்பத்தியை தடுத்திட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நகராட்சி நிர்வாகம், குளத்தில் கழிவு நீர் தேங்குவதை தடுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior