உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

பண்ருட்டி நகராட்சிக்கு நுகர்வோர் சங்கம் கோரிக்கை

பண்ருட்டி : 

                  பண்ருட்டியில் சுகாதாரமற்ற முறையில் உணவு பண்டங்கள் விற்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
 
                 பண்ருட்டி தாலுகா நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்க செயற் குழு கூட்டம் நடந்தது.  சங்க தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். செல்வராஜ், கலியபெருமாள்,ஜோசப்  முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விழுப்புரம்-மாயிலாடுதுறை ரயில் இயங்கும் முன் பண்ருட்டி ரயில்வே ஸ்டேஷன் சாலையை சீரமைக்க வேண்டும். நகரில் உள்ள ஓட்டல், டீக்கடை, இரவு நேர டிபன் கடைகளில் உணவு பண்டங்களை  சுகாதாரமற்ற முறையில் விற்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior