உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

கொசு மூலம் பரவும் நோய்கள் ஒழிப்பு பயிற்சி

சிறுபாக்கம் : 

              மங்களூர் ஒன்றியத்தில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
 
                 மங்களூர் ஒன்றிய வளாகத்தில் கொசுக்கள் மூலம் பரவும் தொற்று நோய்களை ஒழிக்கும் பயிற்சி முகாம் நேற்று  நடந்தது. மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் புஷ்பராஜ், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். மேலாளர் கண்ணன் வரவேற்றார். டாக்டர்கள் மகேஸ் வரி, பிரேம்நாத் ஆகியோர் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள், தடுப்பு வழிகள் குறித்து பயிற்சியளித்தனர். இதில் ஊராட்சி தலைவர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior