உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

மீனவர்களுக்கு அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் பணி துவக்கம்


பரங்கிப்பேட்டை : 

                பரங்கிப்பேட்டையில் மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணியை பேரூராட்சி துணை சேர்மன் செழியன் துவக்கி வைத்தார்.
 
                  கடற்கரை பகுதிகளில் தீவிரவாதிகள் நடவடிக் கைளை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதிகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல் லும் மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங் குவதற்கு புகைப்படும் எடுக்கும் பணி துவங்கியது. ஆரியநாட்டு சலங்குகார தெருவில் புகைப்படம் எடுக்கும் பணியை பேரூராட்சி துணை சேர்மன் செழியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்  கிராம தலைவர் பரமசிவம், உள் நாட்டு மீனவர் சங்க தலைவர் சுப்ரமணியன், நிர்வாகிகள் கோவிந்தசாமி, ராமதாஸ், சுப்ரமணி, மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior