உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

விருது பெற்ற மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா

விருத்தாசலம் : 

                புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல் நிலைப்பள்ளியில் வளரும் தமிழ் கலைஞர் விருது பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.
 
               பாரதியார் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் தமிழ் கலைத்திறன் வளர்ச்சி போட்டி தஞ்சாவூரில் நடந்தது. இதில் 13 மாவட்டங்களில் இருந்து 40 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் பங்கேற்ற விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலை பள்ளி 12ம் வகுப்பு மாணவன் செல்வமணி பேச்சு, கவிதை, குறள் ஒப்பித்தல் ஆகிய மூன்று போட்டிகளில் முதலிடத்தை பெற்றார். மேலும் மாறுவேடப் போட்டியில் 2ம் இடத்தையும், தனிநடிப்பு போட்டியில் 3ம் இடத்தையும் பெற்றார். பல பரிசுகள் பெற்ற மாணவன் செல்வமணிக்கு பாரதியார் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் வளரும் தமிழ் கலைஞர் விருது வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்று விருது வாங்கிய மாணவன் செல்வமணிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் அதிசயராஜன் தலைமை தாங்கி செல்வமணியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் ரவீந்திரநாதன், பால்அருள்குமார், ஆசிரியர்கள் அன்புசெல்வி, அன்பழகன், ராதாகிருஷ்ணன், ஆல்பர்ட் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior