உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

பணிக்காலத்தில் இறந்த தொ.மு.ச., குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா

நெய்வேலி : 

                    நெய்வேலியில் பணிக்காலத்தில் இறந்த தொ.மு.ச., உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
 
                       என்.எல்.சி., நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரிந்து இறந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்களின் 40 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி  நெய்வேலி டவுன்ஷிப்,  தொ.மு.ச., அலுவலகத்தில் நடந்தது. தொ. மு.ச., தலைவர் வீர ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் கோபாலன், நகர செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பேரவைத் தலைவர் குப்புசாமி மற்றும் பேரவை செயலாளர் சண்முகம் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு காசோலைகளை வழங்கினர். தொ.மு.ச., பொருளாளர் ரகுராமன், அலுவலக செயலாளர் காத்தவராயன், நகர தலைவர் சிவந்தான்செட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior