உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

செம்மைநெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இடுபொருட்கள்

நெல்லிக்குப்பம் : 

               செம்மைநெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங் கும் விழா நடந்தது.
 
             நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வேளாண்மை பொறியியல் கூட்டுறவு சேவை மையத்தில் அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செம்மை நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இலவச இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது. உதவி இயக்குனர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். அலுவலர் சந்திரராசு முன்னிலை வகித்தார். செம்மை நெல் சாகுபடி விவசாயிகளுக்கு களை எடுக்கும் கோனாவீடர், மார்க்கர் கருவி, யூரியா, பொட்டாஷ், சூடோமோனாஸ் ஆகிய மூன்றாயிரம் மதிப்புள்ள பொருட்களை இணை இயக்குனர் இளங்கோவன் வழங்கினார். உதவி அலுவலர்கள் ராமதாஸ், மணியரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior