உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

மத்திய பட்ஜெட் குறித்து குழு விவாதம்

காலாப்பட்டு : 

                  புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை துறை கருத்தரங்க அறையில் பொருளாதார துறை சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் 2010 -11 குறித்த முன்னோட்டம், குழு விவாதம் நடந்தது.
 
                  பேராசிரியர் இப்ராகிம் வரவேற்றார். பல்கலைக்கழக பொருளாதார துறைத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் பட்ஜெட் தயாரிப்பது குறித்து பேசுகையில், "வரவு செலவு நிதிநிலை அறிக்கையில் நிதி பற்றாக் குறையை போக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடலாம். உயர்ந்துள்ள விலைவாசியை போக்க நிதி பற் றாக்குறை, பண புழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் பொருட்களின் விலையை எந்த காரணத்தை கொண்டும் உயர்த்தக்கூடாது. விவசாய துறையில் 4 சதவீத வளர்ச்சியை எட்ட முதலீட்டை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசின் வரவு செலவு நிதிநிலை அறிக்கையில் கல்வி, மருத்துவம், சுற்றுலா துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்' என்றார். சிறப்பு விருந்தினராக சிவகொழுந்து தொழில்துறை சார்பில் கலந்து கொண்டார். புதுச்சேரி சிறு தொழில் கூட்டமைப்பு செயலாளர் பார்த்தசாரதி, திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் கனகசபை, பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் அறவாணன், பாரதிதாசன் மகளிர் கல்லூரி பொருளாதார துறை தலைவர் பிச்சுமணி,புதுச்சேரி வர்த்தக சபை தலைவர் சிவசங்கரன் பங்கேற்று பேசினர். அமைப்பு செயலாளர் பேராசிரியர் முத்தையன் நன்றி கூறினார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior