உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

திட்டக்குடியில் இளைஞர் காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்


திட்டக்குடி : 

             திட்டக்குடியில் இளைஞர் காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
 
             திட்டக்குடி நகர மற்றும் மங்களூர் ஒன்றிய இளைஞர் காங்., சார்பில் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலா ளர் பூமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் நெடுஞ் செழியன், துணைத்தலைவர் ராமலிங்கம், மாநில சேவா தள அமைப்பாளர் அன்பரசு முன்னிலை வகித்தனர். தனவேல் வரவேற்றார். எம்.பி., கிருஷ் ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., புரட்சிமணி விளக்கி பேசினர். கூட்டத்தில் இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. இதில் நகர நிர்வாகிகள் ராஜ்குமார், சங்கர்லால், வர்த்தக பிரிவு சண்முகம், வக்கீல் பிரிவு இளஞ்செழியன், மனிதநேய பிரிவு சடையப்பன், டி.சி.டி.யு., முத்துக்குமார், மங்களூர் வட்டார தலைவர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  பழனியாண்டி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior