உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

நிராமணி ஊராட்சியில் டி.ஆர்.ஓ., நேரில் ஆய்வு

சிறுபாக்கம் : 

                நல்லூர் ஒன்றியத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் நிராமணி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து டி.ஆர்.ஓ., நடராஜன் நிராமணி ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் குடிசை வீடுகளில் வசிப்போர் எண் ணிக்கை, வீடுகளின் நிலை, பட்டா மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா, ரேஷன் கார்டு, மின் இணைப்பு ஆகியவை குறித்து இரண்டு மணி நேரம் ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின்போது, விருத் தாசலம் தாசில்தார் ஜெயராமன், நல்லூர் ஒன்றிய ஆணையர்கள் ரவிசங்கர்நாத், சந்திரகாசன், பொறியாளர் சுப்பிரமணியன்  உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior