உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

சிதம்பரத்தில் நாளை வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

சிதம்பரம் : 

              சிதம்பரத்தில் நாளை (26ம் தேதி) அரசின் வருமுன்காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.
இதுகுறித்து சிதம்பரம் நகராட்சி கமிஷனர் ஜான்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 

                        தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் நாளை (26ம் தேதி) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை நடக்கிறது. முகாமில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இருதயநோய், புற்றுநோய், கண், காது, மூக்கு, தொண்டை, தோல் மருத்துவம் மற்றும் குடல்நோய், குழந்தைகள் நலம், பெண்கள் மகப்பேறு சிறப்பு மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் ஆகியவற்றிக்கு அண்ணாமலைப் பல்கலை ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். ரத்த அழுத்தம் , இ.சி.ஜி., ஸ்கேன், சிறுநீர், சளி, ரத்தம் கிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior