உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

புதுச்சத்திரத்திற்கு புதிய பஸ்: கலெக்டரிடம் கோரிக்கை

பரங்கிப்பேட்டை : 

               சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் அரசு டவுன் பஸ் பழுதாகி விடுவதால் புதிய பஸ் விட வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
                    சிதம்பரத்தில் இருந்து புவனகிரி, சாத்தப்பாடி, வயலாமூர், பூவாலை, அலமேலுமங்காபுரம் வழியாக புதுச்சத்திரத்திற்கு அரசு டவுன் பஸ் செல்கிறது.  பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் காலை, மாலை வேலைகளில் அதிகளவில் சென்று வருகின்றனர். இவர்கள் குறித்து நேரத்திற்கு செல்ல இந்த பஸ்சை விட்டால் வேறு பஸ் இந்த வழியாக கிடையாது. இந்த பஸ் அடிக்கடி பழுதாகி விடுவதால் மாதத்திற்கு 15 நாட்களுக்கு மேல் கூட சரியாக இயங்குவது கிடையாது. இதனால் பழுதடைந்த பஸ்சை மாற்றி புதிய பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior