உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

திட்டக்குடி : 

                திட்டக்குடி அருகே அபாயகர வளைவில் விபத்தினை எதிர்நோக்கி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.
 
                   திட்டக்குடி- தொழுதூர் சாலையில் இளமங்கலம் பஸ் நிறுத்தம் அருகில் ஆபத்தான வளைவு உள் ளது. இங்கு அமைக்கப்பட்ட கருப்பு, வெள்ளை நிறத்திலான தடுப்பு கட்டைகள் பெயர்ந்தும், வாகனங்கள் மோதியதாலும் சிதைந்து பயனற்று கிடக்கிறது. வேகமாக வரும் வாகனங்கள் வளைவில் எதிரே வரும் வாகனங்களுடன் மோதி விபத் துகள் அடிக்கடி நடக்கிறது. அண்மையில் பெய்த கனமழையால் அபாயகர வளைவில் அமைந்துள்ள வடிகால் முற்றிலும் தண் ணீரால் அடித்து செல்லப்பட்டது. மேலும் விவசாய நிலத்தில் தண்ணீர் அதிகளவு தேங்கியதால் பயிர்களை காப்பாற்றவும், வெள்ளாற்றுக்கு தண்ணீரை திருப்பி விடவும் பொக்லைன் இயந்திரம் கொண்டு வடிகாலை வெட்டி அகலப்படுத்தினர். இதனால் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட் டுள்ளது. எனவே அபாயகர வளைவில் தடுப்பு கட்டை அமைக்கவும், மண் அரிமானத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க் கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior