உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

மிலாடி நபியையொட்டி மதுபான கடைகள் மூட உத்தரவு

கடலூர் : 

               மிலாடி நபியையொட்டி வரும் 27ம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   வரும் 27ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி (மிலாடி நபி) அன்றைய தினம் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற் பார்வையாளர்கள் அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.  இதனை மீறி எவரேனும் கடையை திறந்து வைத்திருந்தால் கடை மேற் பார்வையாளர் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior