உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

ஜெ., பிறந்த நாள் விழாவையொட்டி 600க்கும் மேற்பட்டோர் ரத்த தானம்

கடலூர் : 

                ஜெ., பிறந்த நாளையொட்டி கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் 600க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர்.
                  கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்தநாளையொட்டி கடலூர்  பாடலீஸ்வரர் கோவில், ராஜகோபால சுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், தேவநாத சுவாமி கோவில் களில் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் செய்தனர். கடலூர் டவுன்ஹால், ரோட்டரி ஹால், அரசு மருத்துவமனை, விருத்தாசலம் மற்றும் நெய்வேலியில் நடந்த ரத்ததான முகாமை மாவட்ட செயலாளர் சம்பத் துவக்கி வைத்தார். இதில் 600க்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சிகளில் ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமரசாமி, நகர செயலாளர் குமரன், இளைஞரணி தலைவர் மாதவன், இலக்கிய அணி செயலாளர் நத்தம் கோபு, வக்கீல் பிரிவு பாலகிருஷ்ணன், சரவணன், ரவீந்திரன், முருகுமணி மற்றும் ஜெகன் லெட்சுமி நாராயணன், தமிழ்ச்செல்வன், ஜெ., பேரவை சிவலிங்கம் மற்றும் அ.தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன் கோவிலில் முன்னாள் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடந்தது. இதில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சிவசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior