உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்த விளக்கக் கூட்டம்

விருத்தாசலம் : 

                 விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது.
 
                விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கக் கூட்டம் நடந்தது. பி.டி.ஓ., கலியபெருமாள் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகராஜன் வரவேற்றார். மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் பாஸ்கர் கொசு ஒழிக்கும் முறைகள் குறித்தும், எடுக்கவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்து பேசினார். சுகாதார ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், முரளி, வீரமணி, நாட்டுதுரை, பாலகிருஷ்ணன் மற்றும் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior