உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

கோஷ்டி மோதல்: 6 பேர் மீது வழக்கு

சிதம்பரம் : 

             சிதம்பரம் அருகே நடந்த கோஷ்டி மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
                  சிதம்பரம் அடுத்த கண்ணங்குடியை சேர்ந்தவர் ஆதிலோகநாயகி. இவர் எண்ணாநகரத்தில் உள்ள அவரது தம்பி தண்டபாணி வீட்டில் தங்கியிருந்தார்.  அப்போது அதே ஊரை சேர்ந்த முருகவல்லி என்பவருக்கும் ஆதிலோகநாயகிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு கோஷ்டியாக மோதிக் கொண்டனர். அதில் முருகவல்லி, அவரது மகள் மகாலட்சுமி, எதிர்தரப்பில் ஆதிலோகநாயகி, அவரது தம்பி ராஜாராம் ஆகியோர் காயமடைந்து சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருதரப்பு புகார்களின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார், 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior