உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூவர் கைது

சேத்தியாத்தோப்பு : 

              சேத்தியாத்தோப்பில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
 
                 சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சேத்தியாத்தோப்பு பாலத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்றிரந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அள்ளூரைச் சேர்ந்த சிலம்பரசன் (27), குபேந்திரன் (27), ராஜசேகர் (23) என்பதும், மூவரும் அவ்வழியே செல்பவர்களை தாக்கி கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிய வந்தது. அதன்பேரில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பதுக்கி வைத்திருந்த உருட்டை கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior