உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

தொழிலாளர் துறையினர் ஆய்வு : கடை, நிறுவனங்கள் மீது வழக்கு

கடலூர் : 

              கடலூரில் தொழிலாளர் துறை அலுவலர்கள் கடைகள் மற்றும் நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
 
                கடலூரில் தொழிலாளர் ஆய்வாளர் கமலக்கண்ணன் உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர், இரண்டாம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பயிற்சி தொழிலாளர்கள் கடலூர் முதுநகர் மற்றும் நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் பகுதிகளில் 80 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
 
                 அதில் நிறுவன சட்டத்தை மீறியதாக 25, விடுமுறை சட்டத்தை மீறிய 13, குறைந்தபட்ச கூலி சட்டத்தில் 9, எடையளவு சட்டத்தில் 8, பொட்டல பொருட்கள் பிரிவில் 23 வணிகர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். வாரச் சந்தையில் 50 காய்கறி கடைகளில முத்திரையிடப்படாமல் வியாபார உபயோகத்தில் காணப்பட்ட மேஜை தராசு 3, விட்ட தாராசு 4, இரும்பு எடை கற்கள் 27 பறிமுதல் செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior