உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

சேத்தியாத்தோப்பில் பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

சேத்தியாத்தோப்பு : 

                               பஸ் ஏறியபோது தவறி விழுந்த பெண் சக்கரத்தில் சிக்கி இறந்தார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலூரைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மனைவி வசந்தா (45). இவர் நேற்று மாலை சேத்தியாத் தோப்பு பஸ் நிலையத் தில் இருந்து அரசு பஸ்சில் ஓடிச் சென்று முன் படிக்கட்டு வழியாக ஏறியபோது தவறி கீழே விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார். சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior