உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

சாலை விரிவாக்க பணி மந்தம் : விபத்துகளால் மக்கள் அவதி

கிள்ளை : 

             சிதம்பரம் அருகே சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக் காததால் அடிக்கடி விபத்து நடக்கிறது.
 
                 சிதம்பரம் அருகே மண்டபத்தில் இருந்து கிள்ளை வரை சாலையை 2.97 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி கடந்தாண்டு துவங்கியது. 9 மாதங்களில் முடிய வேண்டிய இந்த பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் சாலையோரத்தில் தோண்டிய பள்ளங்களில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் பெய்த மழையில் தண்ணீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி சிறுசிறு விபத்துகளும் நடந்து வருகிறது. இந்த சாலைப் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior