உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

புளியமரத்தில் கார் மோதி ஒருவர் பலி

பரங்கிப்பேட்டை : 

            புதுச்சத்திரம் அருகே புளியாமரத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
 
                  சிதம்பரம் மாலைக்கட்டி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (40). புதுச்சேரியில் இருந்து நேற்று அதிகாலை இண்டிகா காரில் சிதம்பரம் நோக்கி வந்தார். சீர்காழி அடுத்த மேலமாத்தூரை சேர்ந்த சிவக்குமார் காரை ஓட்டி வந்தார். பெரியப்பட்டு அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியாமரத்தில் கார் மோதியது.  இந்த விபத்தில் சுரேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் சிவக்குமார் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior