உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

ஒப்பந்த தொழிலாளர்கள் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                  மாதம் தோறும் 7ம் தேதி சம்பளம் வழங்கக் கோரி பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தைச் சேர்ந்த தமிழ் மாநில ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மற்றும் தேசிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
              கடலூரில் பி.எஸ். என்.எல்., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ் மாநில டெலிகாம் ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்தன் முன் னிலை வகித்தார். தமிழ் மாநில ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுந் தரமூர்த்தி, தேசிய சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் சிறப்புரையாற்றினர். அமைப்பு செயலாளர் வீரமணி,  செயல் தலைவர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் டெண்டரில் குறிப்பிட்டபடி மாதம் தோறும் 7ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேணடும். தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., இ.பி.எப்., ரசீது மற்றும் நெம்பர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior