உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

கடை உடைத்த வழக்கில் ஒருவர் கைது

கடலூர் : 

                கடலூரில் ஸ்வீட் கடையை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கடலூர் எஸ்.என்.சாவடி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் புகழேந்தி(40). இவர் கடலூர் பஸ் நிலையத்தில் ஸ்வீட் ஸ்டால் வைத்துள்ளார். இவரிடம் கடந்த 8ம் தேதி கடலூர் மார்கெட் காலனியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(24), சரத்குமார்(21), கிரிராஜா(21), மணி (எ) மணிமாறன் ஆகியோர் பணம் கேட்டனர். புகழேந்தி மறுக்கவே கடையை அடித்து நொறுக்கினர்.
 
                     இதுகுறித்து புகழேந்தி கொடுத்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேரையும் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரனின் சகோதரர்கள் வெங்கடேசன்(26), மணி உட்பட நான்கு பேர் கடந்த 8ம் தேதி இரவு கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தனர். மேலும் கடையில் வேலை செய்து வந்த சசிக்குமாரையும் தாக்கினர். இதில் கடையில் இருந்த 85 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர். மேலும் மூவரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior