உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

வெள்ளாற்றின் குறுக்கே புதிய பாலம் : அரசுக்கு நுகர்வோர் பேரவை கோரிக்கை

புவனகிரி:

              புவனகிரி வெள்ளாற் றின் குறுக்கே புதியதாக பாலம் அமைத்து தர தமிழக முதல்வருக்கு புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை கோரிக்கை வைத்துள்ளது.
 
இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெயபாலன், சட்ட ஆலோசகர் குணசேகரன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

              புவனகிரி வெள்ளாற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் நிலை குறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை சார்பில் கடந்த  2008ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ம் தேதி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளருக்கு  கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்களிடமிருந்து பாலம் வலுவிழந்து விட்டதாகவும், புதிய பாலம் கட்ட ஆய்வு செய்ய 35.12 லட்சம் ரூபாயில் மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக பதில் கடிதம் வந்தது. அதனைத்தொடர்ந்து தள ஆய்வு மேற்கொள்ளவும், புதிய பாலம் விரைந்து கட்ட ஆவன செய்யும்படி முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. முதலமைச்சர் தலையிட்டு மத்திய நெடுஞ்சாலைத்துறை  அமைச்சகத்தின் மூலம் புதிய பாலம் விரைந்து கட்ட ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior