உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

கடலூர் சில்வர் பீச்சில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பலி

கடலூர் : 

                   கடலூர் சில்வர் பீச்சில் குளித்த  மாணவர் நீரில் மூழ்கி இறந்தார். கடலூர் முதுநகர் குட்டைக்கார தெருவைச் சேர்ந்த மீன் வியாபாரி பழனிவேல் மகன் வேலவன் (16). திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாதத் தேர்வு முடிந்த நிலையில் உடன் படிக்கும் நண்பர்களுடன் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு குளிக்கச் சென்றார். மாணவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது கடலில் எழுந்த பெரிய அலை வேலவனை கடலுக்குள் இழுத் துச் சென்றது. உயிருக்கு போராடி தண்ணீரில் தத்தளித்ததைக் கண்ட சக மாணவர்கள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் கடலில் குதித்து வேலவனை கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் வேலவன் மூச்சு திணறி இறந்துவிட்டார். தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior