உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

தொல்லை கொடுத்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்தனர்

விருத்தாசலம் : 

                     விருத்தாசலம் அருகே கிராமத்தில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டில் விட்டனர்.
 
          விருத்தாசலம் அடுத்த ஏ.கொட்டாரகுப்பம் கிராமத்தில் குரங்குகள் கூட்டமாக தங்கி பொதுமக்களை அச்சுறுத்தியும், நிலங்களில் விளையும் பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குரங்குகளின் தொல்லை அதிகரிக்கவே குரங்குகளை பிடிக்க வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விருத்தாசலம் வனசரக அலுவலர் அருளானந்தமூர்த்தி ஆலோசனையில் வனவர் ஞானசுந்தரம் தலைமையில் வனக்காப்பாளர்கள் சக்கரவர்த்தி, வன காவலர் கள் மண்ணாங்கட்டி, தேவராஜன், தேவராஜூலு ஆகியோர் கள்ளக்குறிச்சி நரிக் குறவர் சவுந்தர்ராஜன் குழுவினருடன் இணைந்து இரும்பு கூண்டு வைத்து குரங்குகளை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் கொடுத்து மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டில் விட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior