உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

மாவட்டம் முழுவதும் 19ல் ஜமாபந்திடி.ஆர்.ஓ., நடராஜன் தகவல்


திட்டக்குடி:

             கடலூர் மாவட்டம் முழுவதும் வரும் 19ம் தேதி முதல் ஜமாபந்தி துவங்குவதாக டி.ஆர்.ஓ., நடராஜன் தெரிவித்தார். 

இது குறித்து திட்டக்குடியில் டி.ஆர்.ஓ., நடராஜன் கூறுகையில் 

              'தீ விபத்தில் பாதித்து வருவாய்த்துறை மூலம் 2,000 ரூபாய் நிதி பெற்ற கூரை வீடு நபர்களுக்கு ஓலை குடிசை மாற்று 'கான்கிரீட்' வீடு திட்டத்தில் சேர்க்கப்படும். தகுதியான ஏழை நபர்களுக்கும், நத்தம் மற்றும் நீர்நிலை புறம்போக்கில் இல்லாத நபர்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும். 80 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலம் நிதியுதவி வழங்க வி.ஏ.ஓ.,க்களை முடுக்கி விட்டுள்ளோம். மாவட்டம் முழுவதும் மே 19ல் ஜமாபந்தி துவங்க உள்ளது. இதனையடுத்து பட்டா மாற்றம், சிட்டா மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பணிகளை நிலுவையின்றி விரைவாக முடிக்க வருவாய்த்துறை அலுவலர்கள் துரிதமாக செயல்படுகின்றனர். போலி ரேஷன் கார்டுகள் எண்ணிக்கை குறைக்கப்பட் டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1 முதல் 15ம் தேதி வரை நடக்கிறது' என கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior