உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

பண்ருட்டி நகராட்சியில் திட்டங்கள் : அரசியல் குறுக்கீட்டால் மக்கள் அவதி

பண்ருட்டி: 

                 தமிழகத்தின் முன் னோடி, ஹைடெக் நகராட்சியாக செயல்பட்ட பண்ருட்டி நகராட்சி தற் போது நிர்வாக சீர்கேட்டால் ஆக்ஸிஜன் ஏற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பண்ருட்டி நகராட்சியில் 33 வார்டுகளில் 20 ஆயிரம் குடும்பங்களில் 55 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பண்ருட்டி நகராட்சி தமிழகத்தில் முன்னோடி நகராட்சியாக பல புதிய திட்டங்கள் செயல்பட்டது.

                     முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு தமிழில் சொத்துவரி, குடிநீர் பில்கள் வழங்கப்பட்டது. நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கம்ப்யூட்டரில் கைரேகை வைத்து வருகை பதிவது, நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே சீருடை, எஸ்.எம்.எஸ். செய்தால் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்பாக்கி குறித்து தகவல் தெரிவிக்கும் சேவையும் வழங்கப்பட்டது. திருவதிகை, நான்கு முனை சந்திப்பு, படைவீட்டம்மன் கோவில் பூங்கா உள்ளிட்ட இடங்களில் வரி மற்றும் பொதுமக்கள் சேவைக்கான கம்ப்யூட்டர் மையம், நகராட் சிக்கு என தனி வெப்சைட் உருவாக்கப்பட்டது. பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்று, சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி, புகார் மனு உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களே தெரிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை வசதி துவக்கப்பட்டது.தெருவிளக்கு பராமரிப்பு, சுகாதார பணிகளுக்காக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்பட்டது. இதற்காக வார்டுகள் தோறும் தொண்டு நிறுவனங்கள் மூலம் வீட்டுக்கு வீடு பிளாஸ்டிக் கூடை, சுற்றுச்சுழல் பாதுகாக்க நிழல் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

                    திருவதிகை, படைவீட்டம்மன் கோவில் ஆகிய பகுதியில் திரு வள்ளுவர் படிப்பகம் உருவாக்கப்பட்டு நூல் அறிவு பெற பத்திரிகைகள், வார இதழ்கள் வழங் கப்பட்டது.
வரிவசூல் செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் வார்டுகள் தோறும் அதிகாரிகள், நிர்வாகத்தினர் பங் கேற்ற முகாம்கள், நடமாடும் வாகனம் மூலம் கம்ப் யூட்டரில் வரி செலுத்தும் முறை ஆகியவை செயல்படுத்தப்பட்டது. நகராட்சி அலுவலகம் பின்புறம் மூலிகை தோட்டம் அமைத்து மூலிகை மரங்களின் பயன்பாடு குறித்தும், ராசி, நட்சத்திரங்களுக்குரிய மூலிகைத் தோட்டமும் துவக்கப்பட்டது.நகராட்சியின் பணிகளை மகாராஷ்டிரா மாநில முன்னாள் கவர்னர், தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர், மூத்த ஐ.ஏ. எஸ்.மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் நகராட்சி செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு பாராட்டினர். பண்ருட்டி நகராட்சியின் தமிழ் 'சாப்ட்வேர்' பயன்படுத்தி கொடைக்கானல் உள் ளிட்ட நகராட்சிகள் பின் பற்றியது.ஆனால் தற்போது எல் லாம் தலைகீழாக மாறிய நிலையில் காணப்படுகிறது. குப்பை வண்டிகள் அனைத்தும் வீணாகி, அலுவலர்கள் கம்ப்யூட்டர் வருகை பதிவேடு, பொதுமக்கள் கம்ப்யூட்டர் தொடு திரை அகற்றப்பட்டது. வரிவசூல் வாகனம் பழுதாகி கிடக்கிறது.தெருவிளக்குகளை தனியார் வசம் அளித்தும் முறையாக பராமரிப்பதில்லை. மக்கும் குப்பை, மக்காத குப்பை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மூலிகை தோட்டம் பாழானது. அப்போது குறைந்த எண்ணிக்கையில் பணியா ளர்கள் இருந்தும் சுகாதார பணிகள் சிறப்பாக இருந் தது. ஆனால் தற்போது ஒரு சுகாதார அலுவலர், மூன்று ஆய்வாளர்கள், 105 துப்புரவு பணியாளர்கள் இருக் கும் நிலையில் சுகாதார பணிகள் சுகவீனமானது.சுகாதார அலுவலர், ஆய்வாளர், மேற்பார்வையாளர்களை ஊழியர்களே தாக்குவதால் சுகாதார பணிகளை சுகாதார அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்வதில்லை.

                    நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வருவதில்லை. மேலும் அரசியல் குறுக்கீடு காரணமாகவும் அதிகாரிகளால் முழுமையாக செயல்பட முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதும் இந்த அவலத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior