உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

கடலூர்:

            மிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் கடலூரில் சனிக்கிழமை மாலை நடந்தது. தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்று கோரியும், அரசியல் சட்டத்துக்கு முரணாக, ஜாதியை மதத்துடன் இணைத்து இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் கருப்பையன், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் வி.மேரி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் என்.எஸ்.அசோகன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior