உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

மேல்நிலை தொட்டிசீரமைக்க கோரிக்கை

ராமநத்தம்: 

                  ஆலத்தூர் ஊராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநத்தம் அடுத்த ஆலத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய 30 ஆயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட் டியிலிருந்து 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

                 கடந்த சில ஆண்டுகளாக தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்தும், உள்புறம் பழுதடைந்தும் இருப்பதால் குடிநீர் கசிகிறது. மேலும், தொட்டியில் இருந்து வீணாகும் குடிநீர் அருகில் உள்ள அங்கன் வாடி, வி.ஏ.ஓ., மற்றும் ஊராட்சி அலுவலக பகுதிகளில் தேங்கி நிற்பதால் நோய் பரப்பும் காரணிகளான கொசு, பன்றிகளின் வசிப்பிடமாக உள் ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.குடிநீருக்காக பயன்படுத்தி வரும் பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior