உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

பண்ருட்டி நகராட்சி பகுதியில்பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

பண்ருட்டி: 

               பண்ருட்டி நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்க, பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கமிஷனர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
 
பண்ருட்டி நகராட்சி கமிஷனர் உமா மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் டிசம்பர் மாத கூட்ட தீர்மானத்தின் படி மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகள், டம்ளர், மேஜை விரிப்பு, உணவு விடுதியில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கைபடி தற் போது உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்கவும், திருப்பி அளிக்கவும் காலஅவகாசம் கோரினர். அதன்படி வரும் ஜூன் 15ம் தேதிக்கு பிறகு 20 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்கவும், பயன்படுத்துவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காகிதம் உள்ளிட்ட மாற்று பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இல்லையெனில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior