உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

அம்மன் படத்திற்கு வர்ணம் தீட்டிவிருத்தாசலத்தில் உலக சாதனை முயற்சி

விருத்தாசலம்: 

                   விருத்தாசலத்தில் சாதனை முயற்சியாக வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் படத்திற்கு வர்ணம் தீட்டும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் திருமலை திருச்சானூர் திருமண மண்டபத்தில் ஆர்ய வைஸ்ய மகா சபா சார்பில் உலக சாதனை முயற்சியாக வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் படத்திற்கு வர்ணம் தீட்டும் நிகழ்ச்சி நடந்தது.

                    சேலஞ்ச்- 2010 என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச் சியில் 2,382 பேர் கலந்து கொண்டு வாட்டர் கலர், ஆயில், அக்ரலிக், மெட்டாலிக், பேப்ரிக் பெயிண்ட்களால் வர்ணம் தீட்டினர்.காலை 9.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை மூன்று மணி நேரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். வயது வித்தியாசம் பாராமல் குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஒரே கடவுள் படத்திற்கு வண்ணம் தீட்டி உலக சாதனைக்கு முயற்சி செய்துள்ளனர். ஆர்ய வைஸ்ய மகா சபா நிர்வாகிகள் ஷேஷாத்ரி, ரங்கநாதன், சுதர்சனம், சுகந்தி, மோகன், ராமதாஸ், பிகாஷ், மணிகண்டன், பிரதீப்குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior