உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

ஆங்கில இலக்கண பயிற்சி வகுப்பு

கிள்ளை: 

           பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 'முதல் வகுப்பு கல்வி திட்டம்' மூலம் சிறப்பு ஆங்கில இலக்கண பயிற்சி வகுப்பு நடந்தது.
 
                 சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி நடுநிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பை பரங்கிப்பேட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்து சுகுமார் தலைமை தாங்கினார். கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆனந்த வேல் துவக்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியர் கண்ணன் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கண சிறப்பு வகுப்பை நடத்தினார். மாணவர்களுக்கு நோட்டு, பேனா இலவசமாக வழங்கப்பட்டது. வேதரத்தினம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதே போன்று முட்லூர் தொடக்கப் பள்ளியில் நடந்த வகுப்பில் ஆசிரியை காயத்ரி தேவி ஆங்கில இலக்கண வகுப்பை நடத்தினார். இரு மையங்களில் நடந்த சிறப்பு வகுப்பில் பள்ளிக்கு ஒரு மாணவர் வீதம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior