உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

கம்ப்யூட்டர் மூலம் கரும்பு வெட்டு உத்தரவு

'சேத்தியாத்தோப்பு: 

               எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கம்ப்யூட்டர் மூலம் கரும்பு வெட்டு உத்தரவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார். 

இது குறித்து சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஆட்சியர் ஆசியாமரியம் கூறுகையில் 

                       'எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அனைத்து கணக்குகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரும்பு பதிவு மற்றும் கரும்பு வெட்டு உத்தரவுகளையும் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த காலங்களில் இருந்த குறைபாடுகள் களையப்பட்டுள்ளது. 2010-2011ம் ஆண்டு அரவை பருவத்திற்கான வெட்டு உத்தரவுகள் அந்தந்த கரும்பு கோட்ட அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மூலம் வழங்கப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior